கனிமொழி கட்சியில் உள்ளவரை திமுக ஆட்சிக்கு வரமுடியாது.. எச் ராஜா தாக்கு!
சென்னை: கனிமொழி கட்சியில் உள்ளவரை ஸ்டாலினால் ஆட்சிக்கு வர முடியாது என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
திமுக எம்பியான கனிமொழி எச். ராஜா பாஜகவில் இருக்கும் வரை அந்தக் கட்சி வளர்ச்சி அடையாது என்று கூறியிருந்தார். மேலும் எச். ராஜாவால் தான் இந்தியா, தமிழகம் மற்றும் பாஜகவுக்கு இழுக்கு என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரது விமர்சனத்துக்கு எச் ராஜா டிவிட்டர் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார். அதாவது ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் கருப்புச் சட்டையும், கருப்புத் துண்டும் பக்கத்தில் உள்ளவரை ஸ்டாலினால் ஆட்சிக்கு வர முடியாது என்றார் அண்ணன் அழகிரி அவர்கள்.
RK நகர் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் கருப்புச் சட்டையும், கருப்புத் துண்டும் பக்கத்தில் உள்ளவரை ஸ்டாலினால் ஆட்சிக்கு வர முடியாது என்றார் அண்ணன் அழகிரி அவர்கள். ஏழுமலையானை கனிமொழி அவமதித்த பின் அவர் திமுக வில் உள்ளவரை என்று சேர்த்துக் கொள்ளலாம்.
— H Raja (@HRajaBJP) January 26, 2018
ஏழுமலையானை கனிமொழி அவமதித்த பின் அவர் திமுகவில் உள்ளவரை என்று சேர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். அதாவது திருப்பதி ஏழுமலையானை அவமதித்த கனிமொழி திமுகவில் உள்ள வரை ஸ்டாலினால் ஆட்சிக்கு வரமுடியாது என எச் ராஜா தெரிவித்துள்ளார்.