ஜெ. போட்டியிடும் ஆர்.கே நகரை பதட்டமான தொகுதியாக அறிவிக்க திமுக கோரிக்கை
சென்னை: சென்னை ஆர்.கே நகர் தொகுதியை பதட்டமான தொகுதியாக அறிவிக்க வேண்டும் என திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் வலியுறுத்தியுள்ளார்.
சட்டசபை தேர்லுக்கான வாக்குப் பதிவிற்கான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதால் அந்த தொகுதி வி.ஐ.பி அந்தஸ்து பெற்றிருக்கிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஆர்.கே.நகரில் வெளியூர் நபர்கள் நேற்று மாலை 6 மணிக்கே வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வெளியேறவில்லை.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களை வெளி மாநிலத்தில் இருந்து ஆர்.கே நகருக்கு வந்துள்ளனர். அவர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் பூத்துக்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். எனவே, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தி,.கண்காணிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிம்லா முத்துச்சோழன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications