முதல் நாளே அவசரம் அவசரமாக வேட்பு மனுத் தாக்கல் செய்த திமுகவின் டிபிஎம் மைதீன்கான்!
நெல்லை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய முதல்நாளான இன்று பாளையங்கோட்டை வேட்பாளர் மைதீன்கான் உட்பட திமுக வேட்பாளர்கள் சிலர் தங்கள் தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
சட்டசபைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கடந்த 13ம் தேதி அக்கட்சி வெளியிட்டது. அதன்படி, பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான மைதீன்கான் அறிவிக்கப்பட்டார்.

ஆனால், அவரை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேட்பாளர் பட்டியல் வெளியான சிறிது நேரத்திலேயே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மைதீன்கானின் கொடும்பாவியை எரித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து பாளை தொகுதி டிபிஎம் மைதீன்கானுக்கு கொடுக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் அவர் தொகுதி மக்களுக்கு நன்மை ஏதும் செய்யவில்லை என போராட்டக்காரர்கள் கூறினர்.
பின்னர் இதன் தொடர்ச்சியாக பாளையங்கோட்டை தி.மு.க. அவைத்தலைவர் வேலு தலைமையில் திமுக நிர்வாகிகள் சுமார் 200 பேர், சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து, மைதீன்கானை மாற்றக் கோரி மனு அளித்தனர்.
ஆனால், தொடர்ந்து மைதீன்கானை கட்சித் தலைமை மாற்றாததால் அவரது உருவபொம்மையை திருநெல்வேலி மாநகரின் வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலத்தில் தூக்கில் போட்டு, தங்கள் எதிர்ப்பை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர். தகவலறிந்து வந்த போலீசார், உருவபொம்மையை அகற்றினர். இதேபோல், மொபைல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தும், மொட்டையடித்தும் அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இவ்வாறு தொடர்ந்து மைதீன்கானை மாற்றக் கோரி போராட்டங்கள் நடந்து வரும் சூழ்நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய முதல்நாளான இன்று அவசர அவசரமாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் மைதீன்கான்.
கட்சித் தலைமை தன்னை மாற்றி விடாமல் இருக்க இவ்வாறு அவர் விரைந்து வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், கட்சித் தலைமையில் அனுமதியோடு தான் இன்று மைதீன்கான் வேட்பு மனுத்தாக்கல் செய்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் முத்துசாமியும், சங்கரன்கோவில் வேட்பாளர் அன்புமணியும் தங்களது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications