நள்ளிரவு 12.20க்கு பூட்டப்பட்ட கருணாநிதி வீட்டு கதவுகள்.. தொண்டர்கள் கலைந்து செல்ல உத்தரவு
Recommended Video

சென்னை: கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டு கதவு இரவு 12.20 மணியளவில் பூட்டப்பட்டது. எனவே இரவு இனிமேல் தலைவர்கள் யாரும் பார்க்க வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
கருணாநிதி உடல் நிலை குறித்த வதந்தியால் கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இரவு 11.30 மணிக்கெல்லாம் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு கிளம்பிவிட்டார். ஆனால், தொண்டர்கள் கலையவில்லை. எவ்வளவோ வேண்டுகோள்விடுத்தும் தொண்டர்கள் கருணாநிதியை வாழ்த்தி கோஷமிட்டபடி இருந்தனர்.
எங்கள் குரல் கருணாநிதி காதில் விழுந்தாலே போதும், அவர் மருந்து மாத்திரை சக்திகளையும் மீறி எழுந்துவிடுவார் என அவர்கள் ஆவேசமாக கூறினர். இதையடுத்து இரவு 12.20 மணியளவில் கோபாலபுரம் வீட்டு இரும்பு கேட் இழுத்து பூட்டப்பட்டது. வெளியே போடப்பட்டிருந்த விளக்குகளை இல்லத்தினர் அணைத்தனர். எனவே, தொண்டர்கள் பலரும் வீடு திரும்பினர்.

தொண்டர்கள் கலைய உத்தரவு:
இதற்கிடையே, திமுக தலைவர் கருணாநிதி ஓய்வில் இருப்பதால் இடையூறு செய்யாமல் கோபாலபுரம் பகுதியில் குழுமியுள்ள தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு திமுக தலைமைக்கழகம் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications