தலைமை செயற்குழுவைக் கூட்டுகிறது திமுக.. மார்ச் 5ம் தேதி கருணாநிதி தலைமையில்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தனது தலைமை செயற்குழுக் கூட்டத்தை மார்ச் 5ம் தேதி கூட்டியுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் 5.3.2015 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டத்தில் தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று அன்பழகன் அறிவித்துள்ளார்.
தலைமை செயற்குழுக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ள பொருள் குறித்து தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications