திடீரென உயர்நிலை செயல் திட்டக் குழுவைக் கூட்டும் திமுக.. நாளை

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தனது உயர்நிலை செயல் திட்டக் குழுவைக் கூட்டியுள்ளது. 13ம் தேதி, அதாவது நாளை இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் உயர் மட்டக் குழு இதுதான். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு இந்தக் குழுவின் ஒப்புதல் பெறப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது இந்தக் கூட்டம் நாளை கூட்டப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

DMK convenes high level meeting on Feb 13

இந்தக் கூட்டத்தில் உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அன்பழகன் கூறியுள்ளார். இக்குழுக் கூட்டத்தில் தற்போதயை தமிழக அரசியல் குழப்பம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. இதில் திமுகவின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோரினால் அதை ஆதரிப்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+