எச். ராஜாவின் கீழ்த்தரமான விமர்சனம்.. கடும் நடவடிக்கை எடுக்க திமுக கோரிக்கை
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையையும் மிக மோசமாக விமர்சித்துப் பேசியுள்ள எச். ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.
H.ராஜா காவல்துறையினரிடம் தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் உயர்நீதிமன்றத்தையும் கீழ்தரமான வார்தைகளை கொண்டு அவமதித்துள்ளார். இதற்கான காணொளி ஆதாரம் வெளியாகியுள்ளன. கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் H.ராஜா மீது தமிழக அரசு உடனை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— RS Bharathi (@RSBharathiDMK) September 16, 2018
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், எச்.ராஜா காவல்துறையினரிடம் தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் உயர்நீதிமன்றத்தையும் கீழ்தரமான வார்தைகளை கொண்டு அவமதித்துள்ளார். இதற்கான காணொளி ஆதாரம் வெளியாகியுள்ளன.
கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் எச்.ராஜா மீது தமிழக அரசு உடனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதி கோரியுள்ளார். புதுக்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக எச். ராஜா காவல்துறையினருடன் மோதியுள்ளார். அப்போது காவல்துறையினரை மிக மோசமாக விமர்சித்துப் பேசினார். டிஜிபைய தரக்குறைவாக விமர்சித்துள்ளார். உச்சகட்டமாக உயர்நீதிமன்றத்தையும் அசிங்கிப்படுத்தி விட்டார்.