For Daily Alerts
Just In
கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய நீதிமன்றத்தில் முறையீடு
சென்னை: கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி மீது தமிழக அரசு சார்பில் இதுவரை 13 அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அவர் கடந்த 7-ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
இதைத் தொடர்ந்து அவர் மீதான 13 அவதூறு வழக்குகளையும் தள்ளுபடி செய்யும்படி திமுக நீதிமன்றத்தில் நாடியது. இந்நிலையில் திமுக வழக்கறிஞர் குமரேசன் அதற்கான முறையீட்டு மனுவை கருணாநிதியின் இறப்பு சான்றிதழுடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக அரசு தரப்பு பதிலளிக்க கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு அக்.1-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
DMK demands to reject the defamation cases against karunanidhi with his death certificate.
Story first published: Monday, August 27, 2018, 17:11 [IST]