டிஆர் பாலு மகனை களமிறக்கி 'சசி' நடராஜனை 'கார்ட்டூ'னாக்கி வெளுத்து கட்டிய திமுக!
மெரினா வன்முறைக்கு ஸ்டாலினே காரணம் என கூறிய நடராஜனை கார்ட்டூன் என்பது உள்ளிட்ட பல பெயர்களில் கடுமையாக விமர்சித்துள்ளது திமுக.
சென்னை: சென்னை மெரினா வன்முறைக்கே ஸ்டாலின்தான் காரணம் என கூறிய நடராஜனை இப்போது கார்ட்டூன் ரேஞ்சுக்கு கொண்டு போய்விட்டது திமுக.
சென்னை மெரினா புரட்சியை தங்களது சுயநலத்துக்காக, முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக பயன்படுத்த மன்னார்குடி கோஷ்டி திட்டமிட்டது. ஆனால் மாணவர்கள் இதை அனுமதிக்கவில்லை.
காரணமே மன்னார்குடி கோஷ்டி
இதனால் போலீஸை தூண்டிவிட்டு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது மன்னார்குடி கோஷ்டி. இதை ஊடகங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஸ்டாலின் காரணம்
இதனை திசைதிருப்பும் வகையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்தான் வன்முறைக்கு காரணம்; அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என சசசிகலாவின் கணவர் நடராஜன் பேட்டி கொடுத்தார். இப்பேட்டிக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
திமுக விளாசல்
அதுவும் திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர். பாலுவின் மகனான டி.ஆர்.பி ராஜா, நடராஜனை கார்ட்டூன் ரேஞ்சுக்கு விமர்சித்திருக்கிறார். அதாவது சுப்பிரமணியன் சுவாமியைப் போல ஒரு கோமாளிதான் என நடராஜனை வசைபாடி வெளுத்து கட்டியிருக்கிறார்.
திருநாவுக்கரசர் சாடல்
நடராஜனின் நண்பர் திருநாவுக்கரசரும் இது தொடர்பாக கூறுகையில் பொய் பிரச்சாரம் செய்யக் கூடாது என சாடியிருந்தார். கார்ட்டூன், பொய்யர், தலைமறைவு அரசியல்வாதி என ஏகத்துக்கும் ஒரே பேட்டியில் வாங்கி குவித்துவிட்டார் நடராஜன்.
வாயை கொடுத்து வாங்கிக் கட்டுவது என்பதற்கு நடராஜனே நல்ல உதாரணம்!