சட்டசபை சம்பவங்கள் தொடர்பாக வழக்கு தொடருவோம்: ஸ்டாலின்

சட்டசபையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக வழக்கு தொடருவோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக வழக்கு தொடருவோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்பது திமுகவின் கோரிக்கை. சட்டசபையில் இதை திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று வலியுறுத்தினர்.

DMK to file case on Assembly violences, says MK Stalin

ஆனால் சபாநாயகர் இந்த கோரிக்கையை நிராகரித்தார். இதனால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு கோரி ஸ்டாலின் சட்டசபைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து சென்னை போலீஸ் அதிகாரிகள், சட்டசபை காவலர்கள் சீருடையில் வரவழைக்கப்பட்டு ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை வெளியேற்றினர். இதில் ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டனர். ஸ்டாலினின் சட்டையும் கிழிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் தெரிவித்த ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி கைதானார். இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டசபை சம்பவங்கள் தொடர்பாக வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+