தேர்தல் விதிமீறல் வழக்கு: திமுக மாவட்ட செயலாளர் சுப. தங்கவேலன் கைது
ராமநாதபுரம்: திமுக மாவட்ட செயலாளர் சுப. தங்கவேலன் தேர்தல் விதிமீறல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் முகமது ஜலீலை ஆதரித்து கமுதி, அபிராமம் பகுதிகளில் திமுக மாவட்ட செயலாளர் சுப. தங்கவேலன் எம்.எல்.ஏ தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் தேர்தல் விதிமுறைகளை மீறி 16 வாகனங்களில் தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரம் செய்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அபிராமம் போலீஸார் சுப. தங்கவேலன் மீது வழக்குபதிவு செய்தனர். ஆனால் அப்போதே அவரை கைது செய்யவில்லை.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் பரமகுடி டி.எஸ்.பி வினோத் சாந்தாராம் உத்தரவின் பேரில் அபிராமம் சப் -இன்ஸ்பெக்டர் சுப. தங்கவேலனை கைது செய்தார். பின்பு சொந்த ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications