சட்டசபை தாக்குதல், நம்பிக்கை வாக்கெடுப்பு... பிரணாப் முகர்ஜியிடம் நேரில் முறையிட திமுக முடிவு
சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் மீது நடந்த தாக்குதல், நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்கிறது திமுக.
சென்னை: தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் எதிர்க்கட்சியினரை வெளியேற்றி விட்டு நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவிக்கக் கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க திமுக முடிவு செய்துள்ளது.
இதற்காக திமுக எம்.பிக்கள், குடியரசுத் தலைவரிடம் நேரம் ஒதுக்கக் கோரி அணுகியுள்ளனராம்.

சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கு கோரியிருந்தது. சனிக்கிழமை இதற்காக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த திமுக, காங்கிரஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணியினர் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் தனபால் அதை ஏற்கவில்லை. விடாப்பிடியாக மறுத்து வந்தார்.
மேலும் திமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறும் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வந்து வெளியே போட்டனர். அப்போது பல திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக மு.க.ஸ்டாலினும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவைக் காவலர்களுடன் போலீஸ் அதிகாரிகளும் மார்ஷல் உடையில் புகுந்திருந்ததும் பின்னர் அம்பலமானது.
இதையடுத்து எதிர்க்கட்சியினரை வெளியேற்றி விட்டு வாக்கெடுப்பை நடத்தியுள்ளனர். மேலும் 2 முறை தீர்மானத்தை முன்மொழிந்தால் முதல்வர். இது சட்டவிரோதமானது. திமுக எம்.எல்க்களைத் தாக்கியுள்ளனர். கூவத்தூரிலிருந்து அடைத்து வைத்திருந்த எம்.எல்.ஏக்களை கூட்டி வந்து மிரட்டி வாக்களிக்க வைத்துள்ளனர். எனவே இந்த வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் ஆளுநரைச் சந்தித்தது திமுக. ஆனால் ஆளுநர் கைவிரித்து விட்டார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது திமுக. நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், தற்போது குடியரசுத் தலைவரிடமும் நேரடியாக முறையிட திமுக முடிவு செய்துள்ளது. திமுக எம்.பிக்கள் குழுவாக சென்று குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளனர். இதற்காக நேரம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications