திருவண்ணாமலை அருகே வாக்குச்சாவடியில் திமுக-அதிமுகவினர் மோதல்.. 3 பேர் மண்டை உடைப்பு
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: அதிமுக, திமுகவினர் நடுவே ஏற்பட்ட மோதலில் 3 பேர் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம், சேப்பாபட்டில் நடந்துள்ளது.
இங்குள்ள அரசு பள்ளியொன்றில் வாக்குப்பதிவு காலை முதல் அமைதியாக நடைபெற்று வந்தது. ஆனால், திடீரென, திமுக, அதிமுக நிர்வாகிகள் நடுவே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஏற்பட்ட கைகலப்பில் திமுகவினர் மூன்றுபேரின் மண்டை உடைந்தது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதேபோல, ராமநாதபுரம் கமுதி முதல்நாடு 46-வது வாக்குச் சாவடியில் மோதல் ஏற்பட்டது. இருதரப்பு மோதலைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர்.












Click it and Unblock the Notifications