Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணுவம் போல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மெரினா.. காவல்துறைக்கு அவமானம்.. ஜெ. அன்பழகன்

மெரினா கடற்கரை ராணுவம் போல காவல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காவல் ஆணையரை கேட்டுக் கொண்டுள்ளா

Subscribe to Oneindia Tamil

சென்னை : மெரினா கடற்கரையை காவல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது சென்னை நகர காவல்துறைக்கு களங்கம் என்பதால் உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையரை திமுக எம்எல்எ ஜெ. அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு தடை கேட்டு கடந்த இரண்மு நாட்களுக்கு முன்னர் திடீரென மாணவ அமைப்பினர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இதனையடுத்து மெரினா கடற்கரையில் மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் மெரினா கடற்கரை சாலையில் கடுமையான கெடுபிடிகள் போடப்பட்டுள்ளன. இதே போன்று மெரினா கடற்கரை செல்லும் சர்வீஸ் சாலையிலும் ஆங்காங்கே பேரிகார்டுகள் அமைத்து போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 மெரினாவிற்கு சீல்

மெரினாவிற்கு சீல்

இந்நிலையில் மெரினாவில் போலீஸ் போடப்பட்டிருக்கது குறித்து சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை மாநகர ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தின் நகலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : உலகின் அழகான கடற்கரையில் இரண்டாவது இடம் பெற்ற மெரினா கடற்கரை தற்போது காவல்துறை கட்டுப்பாட்டில் சீல் வைத்துள்ளனர்.

மக்கள் பயன்பாட்டிற்கு

சென்னை நகரின் பொழுதுபோக்கு அம்சமாக விளங்குவதும் குறிப்பாக என்னுடைய சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதி மக்களக்கு மிகவும் விரும்பும் இடமாக உள்ள மெரினா கடற்கரைக்கு யாரும் செல்லமுடியவில்லை. எனக்கு வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர், அரசுக்கு எடுத்துச் சொல்லி உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர்.

 களங்கம்

களங்கம்

ஆகவே சென்னை நகர காவல்துறை கமிஷனர் உடனடியாக தலையிட்டு காவல்துறைக்கு உத்தரவிட்டு மக்கள் பயன்பெற அனுமதிக்க வேண்டும்.
போராட்டங்களை கண்டு காவல்துறை ராணுவம் போல் கடற்கரையை ஆக்கிரமித்திருப்பது சென்னை நகர காவல்துறைக்கு களங்கம். ஆகவே மாநகர் என்று அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

நாளை மற்றும் நாளை மறுதினம் வாரவிடுமுறையாக உள்ள நிலையில் அன்பழகன் காவல் ஆணையருக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று கட்டுப்பாடுகள் தளர்க்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+