நான் கேட்கிறேன், என் கட்சிக்காரர் அப்படி என்ன தவறு செய்தார்?
சென்னை: நாஞ்சில் சம்பத்தின் நிலை ரொம்பத்தான் பரிதாபமாகி விட்டது. ஆரம்பத்தில் ஓட்டியவர்கள் எல்லாம் இப்போது "சரிண்ணே, சரிண்ணே. அழாதீங்கண்ணே" என்று "ஆறுதல்" கூறும் அளவுக்கு இறங்கி வர ஆரம்பித்து விட்டனர்.
அது மட்டுமா மக்களே.. குன்னம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சிவசங்கர் போட்டிருக்கிறார் பாருங்க ஒரு போஸ்ட்.. பேஸ்புக்ல.. அப்படி "பொங்கியிருக்கிறார்".. சம்பத்துக்காக!
வாங்க அப்படியே நிகழ்ச்சிக்குள்ள போய்ருவோம்....!
"நான் கேட்கிறேன், என் கட்சிக்காரர் அப்படி என்ன தவறு செய்தார்?.
அப்புடி என்ன தாங்க தப்பு பண்ணாரு?. அம்மா நெனச்சத சொன்னாரு நம்ம அண்ணன் நாஞ்சில் சம்பத்து. அதுல்ல என்ன தப்பு?. இப்பவா சொன்னாரு? அப்பவே சொல்லிட்டாரு. அதுக்கு இப்படியா?

" எறும்புகள் சாகிறது என்பதற்காக யானை நடக்காமல் இருக்க முடியுமா ?". இந்த பதிலில் என்ன தப்பு கண்டு பிடிச்சீங்க?. மக்களை எறும்புன்னு சொன்னது தப்பா?. அவங்களை யானைன்னு சொன்னது தப்பா?
இது போல பதிலை இப்பவா சொன்னாரு அண்ணன் சம்பத்து. "ஏன் பேருந்துகளை ஓட்டாமல் நிறுத்தி வச்சிருக்கீங்க?"அப்படின்னு பாண்டே கேட்டப்போ, "அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்"னு தெளிவா சொன்னாரே, அங்கயே கரெக்டா தான் சொன்னாரு.
அதுல்லயும் "இது எங்க ஆட்சி. அம்மா வந்து தொடங்கட்டும்னு காதிருக்கோம். இதனால என்ன குடியா முழுகிப் போச்சு", அப்படின்னு நெத்தியடியா சொன்னாரே, அப்ப நீக்கி இருந்தா நியாயம்.
அதக் கேட்டு அப்பவே நீக்காம, அப்ப சந்தோஷப் பட்டீங்களே அது நியாயமா? அப்ப உங்க கை ஓங்கி இருந்தது. இப்ப நெலம சரி இல்ல, அதனால நீக்குறீங்க. இது ஒரு தலைவருக்கு அழகா?
"வெள்ள காலத்துல 500 பேரு இறந்துருக்காங்க. ஏன் அதற்காக ஒரு தீர்மானம் நிறைவேற்றவில்லை?" இது பாண்டேவின் கேள்வி. அண்ணன் சம்பத்தின் பதில்,"தேவை இல்லை. நிறைவேற்றவில்லை".
மிக சிறப்பான பதில். இதில் உண்மையை தவிர எதுவும் இல்லை. தீர்மானம் நிறைவேற்றவில்லை என்பது நிஜம். நிறைவேற்றாததற்கான காரணம் வேற என்ன இருக்க முடியும் ?
"சாவு வீட்டுக்காக கல்யாணங்கள் நடக்காமலா இருக்கிறது" என்பது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பதில்களை அண்ணன் சம்பத் அளித்திருக்கிறார். இது ஜெயலலிதாவே சொன்ன பதில் போலத் தான் இருக்கிறது.
தான் இது போல பதில் சொல்லி விடுவோமோ என்பதால் தான் ஜெயலலிதா பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை. ஏற்கனவே ஒரு முறை ஆங்கில பத்திரிக்கையாளர் கரன் தாபருக்கு பேட்டி கொடுத்த போது காட்டிய மறுமுகம் இங்கு சம்பத் மூலமாக வெளிப்பட்டிருக்கிறது.
அவ்வளவு தான். அவ்வளவே தான். இன்றைய பேட்டிக்கு ஜெயலலிதாவை கூப்பிட்டிருந்தால் இதை விட கடுமையான பதில் தான் வந்திருக்கும். இல்லை என்றால் பாண்டே தாக்கப்பட்டிருப்பார்.
#உண்மையை உரக்க சொன்ன சம்பத் !
அதானே!
-
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications