சட்டசபைக் கூட்டம்... கருணாநிதி தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழக சட்டசபை நாளை கூடவுள்ள நிலையில் திமுகவினரின் செயல்பாடுகள் குறித்து கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று மாலை திமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டசபை நாளை காலை 10 மணிக்குக் கூடுகிறது. இந்தக் கூட்டத் தொடரை 3 நாட்களுக்கு மட்டும் நடத்த இன்று முற்பகலில் நடந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தது. அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திலேயே வெளிநடப்பு நடந்திருப்பதால் 3 நாள் கூட்டம் எப்படி இருக்கும் என்பது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் சட்டசபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வது அவசியமா என்ற அளவில் விவாதம் நடந்ததாக ஒரு தகவல் கூறுகிறது.
3 நாள் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் திமுக வெளிநடப்பு செய்திருப்பதால் கூட்டத் தொடரில் அது பங்கேற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications