எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது: க. அன்பழகன்

எடப்பாடி பழனிச்சாமியால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: எடப்பாடி பழனிச்சாமியால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவி ஏற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார். தொடர்ந்து குழுக்களாக அமைச்சர்கள் பதவி ஏற்று கோணடனர்.

DMK not support to Edappadi K. Palanisamy, says Anbazhagan

இந்நிலையில், திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், தமிழகத்தின் எதிர்காலம் திமுகவின் வெற்றியை பொறுத்து தான் அமையும். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முழு திருப்தி அளிக்கிறது என்று கூறினார்.

மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக யாரையும் ஆதரிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+