விழுப்புரத்தில் ஆளுநர் பன்வாரிலாலுக்கு கருப்பு கொடி காட்டி திமுக போராட்டம்!
ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி திமுக விழுப்புரத்தில் போராட்டம் நடத்தி வருகிறது.
விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிராக திமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுவாக அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது என்பது அரிதான நிகழ்வாகும். ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவியேற்ற நாள் முதலாக, வெளிமாவட்டங்களுக்கு அவ்வப்பொழுது சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூய்மை இந்தியா திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
அத்துடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன், ஆலோசனைகளையும் நடத்தி வருகிறார். இதுபோன்று அரசு விவகாரங்களில் தலையீடும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டோர் ஆங்காங்கே எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால், விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு செய்தார். இதற்காக விழுப்புரம் வந்த அவருக்கு திமுகவினர் கருப்புக் காடி போராட்டம் நடத்தினர்
முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்றனர்.