திமுக ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு - கருணாநிதி வரவேற்பு
சென்னை: சென்னையில் திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நாளில் அதிக அளவு நீர் திறந்துவிடப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி இன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில் திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். இதை கருணாநிதி வரவேற்றுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணி என்று வரும் போது காங்கிரஸ் கட்சிக்கு இடம் உண்டு. காங்கிரஸை திமுக விலக்கி வைக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியதும், திமுக, தேமுதிக போன்ற மதசார்பற்ற கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முயலும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கூறியதும் நினைவு கூறத்தக்கது.
இந்நிலையில் திமுக போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருப்பதும், அதற்கு கருணாநிதியின் வரவேற்பும் அரசியல் ஆர்வலர்களால் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications