கருத்து சுதந்திரத்தில் தலையிட்டால் மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்- கனிமொழி எச்சரிக்கை
கருத்து சுதந்திரத்தில் தலையிட்டால் மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்- கனிமொழி எச்சரிக்கை
சென்னை : மெர்சல் திரைப்படத்துக்கு பல்வேறு தளங்களில் இருந்து பலரும் ஆதரவு அளித்து வரும் நிலையில், திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.
மெர்சல் திரைப்படம் கடந்த தீபாவளிக்குத் திரைக்கு வந்தது. அதில் சில காட்சிகளில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி வரி, டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் குறித்து பேசும் வசனங்கள் இடம் பெற்று இருந்தன. இதற்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

படத்தில் அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். இதனையடுத்து, சினிமா, அரசியல் என பல்வேறு தளங்களில் இருந்தும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவு நீண்டது. இந்திய அளவில் முக்கிய விவகாரமானது மெர்சல்.
இந்நிலையில், இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தி.மு.க.,வின் ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி, 'கருத்து சுதந்திரம் என்பது அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கி உள்ள உரிமை. அதைத் தடுத்தால் மக்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள். கருத்து சுதந்திரத்திலும், கலையிலும் யாரும் தலையிட முடியாது' என்றார்.












Click it and Unblock the Notifications