முரசொலி மாறனின் 81வது பிறந்த நாள்.. மலர் தூவி கருணாநிதி அஞ்சலி
சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 81வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இன்று மாறனின் 81வது பிறந்த நாளாகும். இதையடுத்து அவர் மிகவும் நேசித்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாறன் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள முரசொலி மாறன் சிலைக்கு கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.

சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த மாறன் படத்துக்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி நினைவுகளில் மூழ்கினார். திமுக பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொது செயலாளர்கள் வி.பி.துரைசாமி, துரைமுருகன், எஸ்.பி.சற்குணபாண்டியன் அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி முன்னாள் மத்திய அமை்சரும், மாறனின் மகனுமான தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications