தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரத்தை வெளியிட வேண்டும்- திமுக கோரிக்கை
சென்னை:லோக்சபாத் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று
தேர்தல்ஆணையத்துக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் அது தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள மனுவில்,"வரும் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள் விவரத்தை தமிழக அரசிடம் இருந்து பெற வேண்டும் .
ஓய்வுபெறுவதற்கு 6 மாதத்துக்கு மேல் இருக்கக் கூடியவர்களையே இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம்.
இந்த அதிகாரிகளின் ஓய்வு பெறும் நாளைக் குறிப்பிட்டு, அவர்களது விவரங்களை மாநிலத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் "என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications