ஸ்டாலினிடம் ரூ. 50 லட்சம் "அட்வான்ஸ்" கொடுத்த தூத்துக்குடி ஜோயல்.. தேர்தல் நிதிக்கு!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் திமுகவில் சமீபத்தில் இணைந்த மதிமுகவின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோயல், ரூ. 50 லட்சம் முதல் கட்ட தேர்தல் நிதியை வழங்கினார்.
நெல்லையில் இன்று தென் மாவட்ட மதிமுகவினர் ஒட்டுமொத்தமாக திமுகவில் இணையும் விழாவை நடத்தியது திமுக. இதில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ஜோயல் உள்ளிட்டோரின் ஏற்பாட்டின் பேரில் பல்வேறு மதிமுக பிரமுகர்கள் உளிட்டோர் கூண்டோடு திமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களை சேர்ந்த மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், கழகசெயல்வீரர்கள் என 5000 பேர் திமுகவில் இணைந்தனர்.
இந்த விழாவில் மாநில இளைஞரணி துணை செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மதிமுக செயலாளருமான எஸ்.ஜோயல் முதல்கட்ட தேர்தல் நிதியாக ரூ.50 லட்சத்தை ஸ்டாலினிடம் வழங்கினார்.












Click it and Unblock the Notifications