அரசியல் ஆதாயத்துக்காகவே கருணாநிதி வைரவிழாவை கொண்டாடும் திமுக: பொன்னார் பாய்ச்சல்
புதுச்சேரி: அரசியல் ஆதாயத்துக்காகவே கருணாநிதி வைரவிழாவை திமுக கொண்டாடுவதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.
புதுச்சேரியில் நடந்த அஞ்சல் துறைக் கட்டடத்திறப்பு விழாவில், கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார். உடன் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், எம்.பிக்கள் ராதாகிருஷ்ணன், கோகுலக்கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து புதுச்சேரியில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் கட்சியை பயன்படுத்திக் கொள்ள திமுக பாசாங்கு செய்து வருகிறது. அது பலிக்காது என்பது அனைவருக்கும் தெரியும்.

பட்டியல் கொடுங்க...
கடந்த 50 ஆண்டுகளாக திமுக செய்த வளர்ச்சி பணிகளை பட்டியலிடட்டும். பார்க்கலாம். அதன் பின்னர் பாஜக குறித்து திமுக குறை சொல்லட்டும். கருணாநிதியின் வைரவிழா அரசியல் ஆதாயத்துக்காக கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்களை பொதுமக்கள் சந்தித்து குறைகளை கூறக் கூடாது என்பது சட்டம் ஒன்றில்லை. புதுச்சேரியில் முதல்வர் ஒரு அங்கம் என்றால்,ஆளுநரும் ஒரு அங்கம்தான்.

சாலை விபத்துகள் அதிகரிப்பு
அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கருத்தில் கொண்டுதான் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு டாஸ்மாக் உத்தரவிட்டது. சாலைகளை சில மாநில அரசுகள் மாற்றம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. சென்னை துறைமுகம்- புதுவை துறைமுகம் இடையே சரக்கு போக்குவரத்தை கையாள்வது குறித்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கலந்து கொள்ள மாட்டோம்
தவறு செய்பவர்களை அழைத்து விழா நடத்தப்படுகிறது. எனவே நிச்சயமாக திமுக விழாவிற்கு செல்ல மாட்டோம். கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் திமுக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பாடுபடுகிறது.

உள்ளாட்சிக்காக...
உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்காகவே இந்தி எதிர்ப்பு, திராவிடம் உள்ளிட்ட பழைய விஷயங்களை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் இனியும் திமுகவிடம் ஏமாறமாட்டார்கள். கொடநாடு கொள்ளை, முக்கிய நபர்கள் கொலை தொடர்பாக விரைவில் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications