தோல்விக்கு பொறுப்பேற்பு.. திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் ராஜினாமா! அடுத்து யார்?
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: சட்டசபை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் தனது பதவியை ராஜினாமா செய்து மேலிடத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி போட்டியிட்ட 8 தொகுதிகளில், வெறும் 2ல் மட்டுமே வெல்ல முடிந்தது.

இந்நிலையில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் தனது பதவியை ராஜினாமா செய்து மேலிடத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார்.
கொங்கு மண்டலத்தின் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக வென்றது. இதுதான் அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர காரணம். எனவே அம்மண்டலத்திலுள்ள பிற திமுக மாவட்ட செயலாளர்களும் தங்கள் பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்ய கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications