தலைக்கு மேல் தொங்கிய கத்தி.. போயே போச்சு.. தப்பியது ஓபிஎஸ், 11 எம்.எல்.ஏக்கள் பதவி.. திமுக ஷாக்!!
சென்னை: ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகர் தனபாலே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் பதவிக்கு ஆபத்து இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2017-ல் இதே கால கட்டத்தில் தமிழக அரசியலில் பெரும் புயல் கிளம்பியது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ. பன்னீர்செல்வம், தர்மயுத்தம் நடத்தினார்.

இதனையடுத்து சசிகலா முதல்வராக முயற்சித்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
2017 பிப்ரவரி 18-ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது அதிருப்தி அணியாக செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள், எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதனால் அதிமுக கொறடா உத்தரவை மீறிய ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கியது திமுக. சில மாதங்களிலேயே ஓபிஎஸ் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஐக்கியமானர். இதனால் தகுதி நீக்கம் செய்யக் கோரிய திமுக மனு கிடப்பில் போடப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என கூறியது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.
இம்மனு விசாரணைக்கு வந்தால் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் பதவி பறிபோகும்; அதிமுக ஆட்சி கவிழும் என கணக்குப் போட்டு காத்திருந்தது திமுக. அக்கட்சி எதிர்பார்த்தபடியே இவ்வழக்கு அண்மையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகரின் நடவடிக்கைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இதனால் திமுக முகாம் மேலும் குஷியானது. இந்நிலையில் இன்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருந்தார். அப்போது உச்சநீதிமன்றத்தில் அவருக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் சபாநாயகரே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி வழகை முடித்து வைத்தது.
இது திமுக தரப்பை பெரும் அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்தும் உள்ளாக்கியுள்ளது. தங்களது தலைக்கு மேலே தொங்கிய கத்தியாக இருந்த இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதால் தங்களது பதவிக்கு பிரச்சனை இருக்காது என நிம்மதி பெருமூச்சுவிடுகின்றனர் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள்.
-
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம்












Click it and Unblock the Notifications