டிஜிபியாக ராமானும் தொடரக் கூடாது.. திமுக வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக டிஜிபியாக அனுப் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டும் கூட ராமானுஜமே தொடர்ந்து அப்பதவியில் நீடித்து வருகிறார். இதற்குத் தடை வதிக்க வேண்டும் என்று கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளரும், தென் சென்னை திமுக வேட்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழகத்திற்கு தேர்தல் டி.ஜி.பி.யாக அனுப் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டிருப்பினும், ராமானுஜம் விடுவிப்பில் செல்லாமல், காவல்துறை தலைவர் பதவியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
நிர்வாக ரீதியாக ராமானுஜம் தொடர்ந்து செயல்படுவதால், நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படக்கூடும். எனவே அவரை அப்பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என கோரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications