ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமாருக்கு திமுக ஆதரவு: ஸ்டாலின்
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் மீராகுமாருக்கு தி.மு.க., ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எதிர் கட்சிகளுடன் கலந்து பேசிய பின்னர்தான் குடியரசுத் தலைவர் வேட்பாளரை நாங்கள் முடிவு செய்தோம் என்று பாஜக கூறியுள்ளது.
ஆனால் அதனை செயல் வடிவத்துக்கு கொண்டு வரவில்லை. ஒப்புக்காக ஒரு நாடகத்தை நடத்தியுள்ளனர். இவர் தான் வேட்பாளர் என்று வெளிப்படையாக எங்களிடம் தெளிவாக எடுத்துச் செல்லவில்லை. அதனால் தான் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் மீராகுமாரை ஆதரிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் மீரா குமார் வெற்றி பெற
வாழ்த்துக்கள் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, அனைத்து தகுதிகளும் உள்ளதாலேயே மீராகுமாரை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம். பாஜக தன்னிச்சையாக வேட்பாளரை நிறுத்தியுள்ளதால், எதிர்க்கட்சிகள் மீராகுமாரை வேட்பாளராக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறினார்.