டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டை கையில் எடுக்கும் திமுக.. களமிறங்கும் உதயநிதி.. இன்று ஆர்ப்பாட்டம்!
சென்னை டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் முன் திமுக சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
Recommended Video
சென்னை: சென்னை டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் முன் திமுக சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று காலை போராட்டம் நடக்க உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குருப்-4 தேர்வில் மோசடி நடந்திருப்பது தமிழகத்தை உலுக்கி உள்ளது. தேர்வை நடத்திய அதிகாரிகளே இதில் ஈடுப்பட்டு கடந்த வாரம் அம்பலம் ஆனது. இந்த முறைகேடு தொடர்பாக வரிசையாக பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி. சி.ஐ.டி. போலீசார் டி.என்.பி.எஸ்.சி. ஆவண குமாஸ்தா ஓம்காந்தன் உள்பட 16 பேரை கைது செய்து உள்ளனர். இதற்கிடையே குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது இப்போது உறுதி ஆகியுள்ளது.
இதில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீஸார் சிவகங்கை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர் என 5 மாவட்டங்களில் நடத்தி வருகிறார்கள்.
தமிழக அரசுக்கு இந்த ஊழல் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. சுமார் 30 க்கும் மேற்பட்டோர் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாகவும் டி.என்.பி.எஸ்.சி தரப்பில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் வியாபாம் ஊழலை போல, தமிழ்நாட்டின் வியாபம் என சொல்லும் அளவுக்கு டி.என்.பி.எஸ்.சி மோசடி இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார்.
படம் ரிலீஸ் ஆகி மறுநாளே தூக்கிட்டாங்க.. மோசம்.. பட்ஜெட் 2020க்கு ரிவ்யூ கொடுத்த ப. சிதம்பரம்!
இந்த நிலையில் சென்னை டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் முன் திமுக சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று காலை போராட்டம் நடக்க உள்ளது.திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்பு காலை 10 மணி அளவில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.