பசுபதிபாளையம் பாலம் விவகாரம்.. மக்களைக் கூட்டி போராட்டம் நடத்த திமுக முடிவு

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில், சேதமடைந்துள்ள பசுபதிபாளையம் பாலத்தை விரைவில் சரி செய்து கட்டிமுடிக்காவிட்டால் பொதுமக்களுடன் இணைந்து திமுக ஆா்ப்பாட்டம் நடத்த கரூர் திமுக முடிவு செய்துள்ளது.

கரூர் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக செயற்க்குழு கூட்டம் மாவட்ட தலைவா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனா்.

DMK warns of agiation in Karur

கூட்டத்தில் பால் விலையை கண்டித்து வரும் நவம்பா் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், கரூா் நகராட்சி கூட்டத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் இல்லையேனில் திமுக தலைவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி படத்தையும் வைக்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் கட்டப்பட்டு வரும் பாலத்தை உடனடியாக கட்டிமுடிக்கவேண்டும். பாலம் கட்டி முடிக்காமல் இருந்ததால் தான் அக் கரையோர மக்கள் பாதிப்படைந்துள்ளனா். பாலத்தை கட்டிமுடிக்க கோரி திமுக பொதுமக்களை திரட்டி ஆா்ப்பாட்டம் நடத்துவது என செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+