ஜெ. சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு - நீதி காப்பாற்றப் பட்டிருப்பதாக திமுக வரவேற்பு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை திமுக வரவேற்றுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு எதிராக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இன்று தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதற்கு திமுகவின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வரவேற்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘இத்தீர்ப்பின் மூலம் நீதி காப்பாற்றப் பட்டுள்ளது. அதிமுக அரசின் தோல்விகளை நாங்கள் மக்களிடத்தில் எடுத்துச் செல்வேம். ஆனால், தீர்ப்பை முன்னிறுத்தி திமுக பிரச்சாரம் செய்யாது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.