திமுகவில் சேர்க்கவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. அழகிரி எச்சரிக்கை
திமுகவில் தன்னை சேர்க்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுகவில் தன்னை சேர்க்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுகவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். ஸ்டாலினுக்கும், துரைமுருகனுக்கும் எதிராக யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

இதனால் அவர்கள் போட்டியின்றி தேர்வாக இருக்கிறார்கள். இதற்கு இடையில் செப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள, பேரணி குறித்து அழகிரி சில திமுக கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். நான்காவது நாளாக உரையாடல் நடத்தும் அவர் மதுரையில் பேட்டியளித்துள்ளார்.
அதில், கருணாநிதி இல்லாததால் கட்சியை காப்பாற்ற முடிவெடுத்தேன்.எங்களை கட்சியில் சேர்க்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். தலைவராக கருணாநிதி இருந்த போது என்னை கட்சியில் சேர்க்கும் படி கூறியுள்ளார்.
ஆனால் அப்போது சிலர் அவரை தடுத்து இருக்கிறார்கள். சிலர் அவர் மனதை மாற்றியுள்ளனர். என்னை கட்சியில் சேர்க்க கூடாது என்று சிலர் ஆசைப்படுகிறார்கள். கருணாநிதி இருந்த வரை அமைதியாக இருந்தேன்.
இப்போது கட்சி மோசமான நிலைக்கு வந்துவிட்டது. அதை காப்பாற்றும் எண்ணத்தில் அவர்களிடம் என்னை கட்சியில் சேர்க்க சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் களமிறங்கியுள்ளேன்.
தொண்டர்களின் வேண்டுகோளுக்காகவே பேரணி நடத்த உள்ளேன். தொண்டர்கள்தான் என்னை பேரணி நடத்தும்படி கூறினார்கள். அவர்கள் கேட்டதால்தான் பேரணியே என்று அழகிரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications