கருணாநிதி மீதான வழக்கை திமுக சந்திக்கும் - ஆர்.எஸ்.பாரதி

Subscribe to Oneindia Tamil

'DMK will face the case against Karunanidhi'
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீதான வேட்பு மனு தாக்கல் குறித்த வழக்கை கட்சி சந்திக்கும், அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று திமுக வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர் தாக்கல் செய்த வேட்புமனுவில் சில தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன என்று அன்றைய தேர்தல் அதிகாரியும், தற்போதைய மாவட்ட வருவாய் அதிகாரியாக உள்ளவர் திருவாரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்து வந்துள்ளது.

தேர்தல் முடிந்து இரண்டே முக்கால் ஆண்டுகள் கழித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு, ஆறு மாத காலத்திற்குள்தான் வழக்கு தொடர வேண்டும் என்பது சட்ட விதி. ஆனால், இரண்டே முக்கால் ஆண்டுகள் கழித்து, இவ்வழக்கினை மேற்கண்ட நபர் கலைஞர் மீது தொடுத்திருக்கிறார்.

11 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, போட்டியிட்ட அத்தனைத் தேர்தல்களிலும் வெற்றி ஈட்டிய கலைஞர் சரித்திர சாதனைக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு இவ்வழக்கு புனையப்பட்டுள்ளது.

எத்தனை பொய்யான வழக்குகளைத் தொடர்ந்தாலும் அவற்றைச் சந்தித்து வெற்றி காண தி.மு.க. சட்டத்துறை என்றும் தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+