லோக்சபா தேர்தல்: திமுகவில் 20-ந் தேதி முதல் மார்ச் 3 வரை வேட்பாளர் நேர்காணல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் நேர்காணலை 20-ந் தேதி முதல் நடத்துகிறது திமுக.

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் விருப்ப மனுக்களை வாங்கியுள்ளது திமுக. அந்த கட்சியின் கூட்டணியும் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் நேர்காணலை அக்கட்சி நடத்துகிறது.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வரும் 20-ந் தேதி முதல் மார்ச் 3-ந் தேதி வரை இந்த நேர்காணல் நடைபெறும்.

திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகன் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற உள்ளது.

எந்தெந்த நாளில் எந்தெந்த தொகுதிகள்...

பிப்ரவரி 20-ல் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறும்

பிப்ரவரி 21-ந் தேதி ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை தொகுதிகளுக்கும் பிப்ரவரி 22-ந் தேதி சிவகங்கை, கரூர், தஞ்சை, நாகை, திருச்சி, மயிலாடுதுறைக்கும் நேர்காணல் நடைபெறும்

பிப்ரவரி 23-ந் தேதி பெரம்பலூர், சிதம்பரம், கடலூர், நீலகிரி, பொள்ளாச்சிக்கும் பிப்ரவரி 25-ந் தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் தொகுதிக்கும் நேர்காணல் நடடபெறும்.

பிப்ரவரி 27-ந் தேதி சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தருமபுரி, பிப் 28ந் தேதி ஆரணி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம், மார்ச் 2ந் தேதி ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதிகளுக்கும் மார்ச்.3 ந் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, புதுச்சேரிக்கும் நேர்காணல் நடைபெற உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+