தனித்தே போட்டியிட்டாலும் 40 தொகுதிகளுமே திமுகவுக்கே..: மு.க. ஸ்டாலின் நம்பிக்கை!
நாகர்கோவில்: லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேமுதிகவில் மாநில துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆஸ்டின் அக்கட்சியிலிருந்து விலகி கடந்த 6-ந் தேதி திமுகவில் இணைந்தார். நாகர்கோவிலில் நேற்று அவரது ஆதரவாளர்கள் மற்றும் பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
தனித்து போட்டியிட்டாலும் 40 -ல் வெற்றி
இந்த விழாவிற்கு தலைமை வகித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசுகையில், லோக்சபா தேர்தலில் திமுக எந்தக் கட்சியோடு கூட்டணி வைத்தாலும் அல்லது தனித்துப் போட்டியிட்டாலும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
கட்சி தொடங்கியதுமே முதல்வர் கனவு
சிலர் கட்சியை தொடங்கியதும் முதல்வராக வர வேண்டும் என நினைக்கின்றனர்.
முதல்வராகவே கட்சி தொடக்கம்
சிலர் முதல்வராக ஆக வேண்டும் என்பதற்காகவே கட்சி தொடங்குகின்றனர்.
என்னாச்சு வாக்குறுதி?
மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அதிமுக அதை முறையாகச் செயல்படுத்தவில்லை என்றார் அவர்.