வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக ஜெ. சொல்லியிருப்பது சிறந்த நகைச்சுவையான செய்தி: ஸ்டாலின்
நாகர்கோவில்: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம் என்று ஜெயலலிதா சொல்லியிருப்பது சிறந்த நகைச்சுவையான செய்தி என திமுக பொருளாளர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நாகர்கோவில் அருகே முன்னாள் எம்.பி., சங்கரலிங்கம் மறைந்ததை தொடர்ந்து அவரது வீட்டுக்கு அஞ்சலி செலுத்த சென்றார் திமுக பொருளாளர் ஸ்டாலின். அங்கு சங்கரலிங்கத்தின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் ஸ்டாலின். அப்போது அவர் கூறியதாவது:

ஆட்சிக்கு வந்ததும்...
கருணாநிதி கொடுத்த உறுதிமொழியை திமுக ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றுவோம்.

மக்கள் சொல்லவில்லையே...
தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ளது என்று ஜெயலலிதா சொல்லியுள்ளார். ஆனால் மக்கள் சொல்லவில்லை.

கருத்துக்கணிப்புகள்...
கருத்துக்கணிப்பில் திமுகவை பொறுத்த வரை சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் வரவேற்க மாட்டோம். விமர்சனமும் செய்ய மாட்டோம். ஒட்டு மொத்தமாக தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி விட்டார்கள்.

சசிகலா குடும்பத்திற்கு மட்டும்...
இருண்டு கிடந்த தமிழகத்தை ஒளியாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளது தமிழகத்தை அல்ல. அவர்கள் உறவினர்கள் மற்றும் சசிகலா குடும்பத்தினருக்குதான் பொருந்தும்.

நகைச்சுவை செய்தி...
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்று சொல்லியிருப்பது மிகுந்த நகைசுவைக்குரிய செய்தி.

தேர்தல் கூட்டணி...
தேர்தல் கூட்டணி பற்றி உரிய நேரத்தில் தெரிவிப்போம். ஹைதராபாத்தில் தலித் மாணவர் சாவுக்கு யார் காரணமோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications