முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பக் கூடாது.. காவல்துறை எச்சரிக்கை
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து யாரும் வதந்தி பரப்பக் கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலை குறித்து யாரும் வதந்திகளை பரப்பக் கூடாது என்று காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்று நோய்க்கான சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் ஒரு பதற்ற நிலை உருவாகியுள்ளது. மேலும், கடைகள், பெட்ரோல் பங்க்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டு விடாமல் தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு போலீசார் அனைவரும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும், யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் போலீசாருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் பதற்றம் நிலவுவதை சாதகமாக்கிக் கொண்டு, முதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் சமூக விரோதிகள் யாராவது வதந்திகளை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து நகரங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி! -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications