தாலிக்கு தங்கத்தை அளித்து அதை டாஸ்மாக் மூலம் பறிக்கும் ஜெ. அரசு: குஷ்பு
திருவண்ணாமலை: தாலிக்கு தங்கத்தை கொடுத்துவிட்டு அதை டாஸ்மாக் மூலம் பறிக்கிறார்கள். அப்படி அவர்கள் அளிக்கும் தங்கம் உங்களுக்கு தேவையா? என அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி காஞ்சி சந்தை திடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

தாலிக்கு தங்கம்
தாலிக்கு தங்கத்தை கொடுத்துவிட்டு அதை டாஸ்மாக் மூலம் பறிக்கிறார்கள். அப்படி அவர்கள் அளிக்கும் தங்கம் உங்களுக்கு தேவையா?

என்ன செய்தீர்கள்?
எங்கு சென்றாலும் செய்வீர்களா, செய்வீர்களா என்று மக்களை பார்த்து கேட்டார்கள். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் அவர்கள் என்ன செய்தார்களாம்.

வெள்ளம்
மக்களுக்காக வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தீர்களா?. சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் இயற்கை அல்ல செயற்கையானது. அந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை.

மாற்றம்
தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். கடந்த சட்டசபை தேர்தலில் தான் தவறு செய்துவிட்டோம். இந்த தேர்தலில் அந்த தவறை செய்யக் கூடாது.

காங்கிரஸ்
நாட்டுக்காக ரத்தம் சிந்திய கட்சி காங்கிரஸ் மட்டுமே. அதனால் காங்கிரஸ் கட்சியை பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கடன் வாங்கிய விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உதவியுள்ளது. ஆனால் ஒரு டிராக்டருக்காக கடன் வாங்கிய விவசாயி தாக்கப்பட்டுள்ளார்.

பாஜக
பாஜகவும், அதிமுகவும் ஒன்று தான். தேர்தல் நேரத்தில் பணம் கொடுப்பார்கள். அது உங்களுடைய பணம். வரும் தேர்தலில் மாற்றம் ஏற்பட்டால் தான் நாட்டையும், பெண்களையும் காப்பாற்ற முடியும்.












Click it and Unblock the Notifications