நான் யாருனு தெரியுதா தாத்தா?: உதயநிதி கேள்விக்கு குழந்தை சிரிப்பை பதிலாக தந்த கருணாநிதி
நான் யாரென்று தெரிகிறதா தாத்தா என்று கருணாநிதியை சந்தித்த உதயநிதி கேட்டார்.
Recommended Video
சென்னை: ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கருணாநிதியிடம் ஆசி வாங்க சென்ற போது உடன் சென்ற உதயநிதி, தாத்தாவிடம் தான் யார் என்று தெரிகிறதா என்று கேட்டதற்கு கருணாநிதி தனது சிரிப்பை பதிலாக அளித்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் முழு ஓய்வில் இருந்து வருகிறார். சமீபத்தில் முரசொலி பவள விழா கண்காட்சியை அந்த அலுவலகத்துக்கு சென்று பார்வையிட்டார்.
அண்ணா அறிவாலயத்துக்கு சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். நாளுக்கு நாள் கருணாநிதியின் உடல்நலம் முன்னேறி வருகிறது. இந்நிலையில் நேற்று தனது கொள்ளுபேரனுடன் வீட்டுக்குள்ளேயே பந்தை வீசி கிரிக்கெட் விளையாடினார் கருணாநிதி.
இந்நிலையில் இன்று ஸ்டாலினின் பிறந்த தினத்தையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோருடன் சென்றார்.
அங்கு கருணாநிதி மற்றும் தயாளு அம்மாளிடம் ஆசி வழங்கினார். அப்போது அருகிலிருந்த உதயநிதியை காட்டி இவர் யாருனு தெரிகிறதா என்று ஸ்டாலின் கேட்டார். பின்னர் உதயநிதியே தாத்தா நான் யாருனு தெரிகிறதா என்று கேட்டபோது ஸ்டாலின் உதயா என்று கூறியதை கேட்ட கருணாநிதி சிரித்தார்.
பின்னர் நேத்து கிரிக்கெட் விளையாடினீங்களா, நான் வீடியோல பார்த்தேன் என்று உதயநிதி கூறியதற்கு குழந்தை போல் ஒரு சிரிப்பை உதிர்த்தார். அப்போது துர்கா ஸ்டாலின் தான் எழுதிய நானும் அவரும் புத்தகத்தை கருணாநிதியிடம் கொடுத்து ஆசி வாங்கினார். புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டார்.