நான் ஏன் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினேன் தெரியுமா?: விஜயகாந்த்
கடலூர்: பேருந்து கட்டணம், மின் கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டதால் தான் நான் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ்-மக்கள் நலக் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பண்ருட்டியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

ஜெயலலிதா
கடலூர் மாவட்டத்தை தானே புயல் தாக்கி சேதம் ஏற்படுத்தியபோதும், வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோதும் இந்த பக்கமே வராத ஜெயலலிதா தற்போது மட்டும் ஏன் வருகிறார்.

மின்சாரம்
வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது மின்சாரத்தை இலவசமாக அளிக்காதவர் தற்போது மட்டும் இலவசமாக அளிப்பதாக கூறுகிறார். மின்சாரமே இல்லாமல் இலவசமாக எப்படி அளிப்பார்?

இலவச செல்போன்
தற்போது அனைவரும் செல்போன் வைத்துள்ளனர். இந்நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு செல்போன் இலசமாக அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் இலவசங்களை அறிவித்து வருகிறார்.

கட்டணம்
பேருந்து கட்டணம், மின் கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டதால் தான் நான் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினேன். திமுகவும், அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இந்த தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையேயான போர்.












Click it and Unblock the Notifications