தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு: மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் தனியார் மருத்துவர்கள் இன்று 12 மணி நேர நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீப காலமாக, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்காக மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இது ஜனநாயக மரபுக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது என்றும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுவது ஏழை மாணவர்களை பாதிக்கும் என்றும் கூறி இந்திய மருத்துவ சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Doctors announces strike today

எனவே இதனை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தினர். ஆனால் பேச்சுவார்ததை தோல்வி அடைந்ததை அடுத்தும், மத்திய அரசு இவ்விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அச்சங்கத்தினர் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலை வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

இதில் தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பிரசவம், உள் நோயாளிகள் சிகிச்சை, அவசர சிகிச்சை தவிர மற்ற புறநோயாளிகள் சிகிச்சை, அவசரமில்லா அறுவை சிகிச்சை பணிகளில் தொடர்ந்து மருத்துவர்கள் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.

இன்று நடத்தும் இந்த 12 மணி நேர வேறுத்தம் ஒரு அடையாள போராட்டம்தான் என்றும் மத்திய அரசின் மனதை மாற்றவில்லை என்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என இந்திய மருத்துவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+