இன்னொரு சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் ஏற்படுத்திவிடாதீர்கள் - ஸ்டாலின் எச்சரிக்கை
இந்தியாவில் இன்னொரு சுதந்திர போராட்டத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசை ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
சென்னை: இந்தி திணிப்பு, மாட்டிறைச்சி என கலகம் செய்கின்றனர். மாட்டிறைச்சியை வைத்து கலகம் செய்கிறார்கள் இந்தியாவில் இன்னொரு சுதந்திர போராட்டத்திற்கு வித்திட வேண்டாம் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா, சட்டசபை வைரவிழா ராயப்பேட்டையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவில் பேசிய ஸ்டாலின், தலைவர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின், மத்திய அரசை ஒரு பிடி பிடித்தார்.

மிகப்பெரிய சவால்
இந்திய ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே நம் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்.கொள்கையில் இருந்து என்றுமே பின்வாங்காதவர் கருணாநிதி மதசார்பற்ற ஆட்சியை உருவாக்க ஒன்று சேர்வோம்.

இந்தியை எதிர்க்கவில்லை
நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். இந்தியை எதிர்த்திருந்தால் பீஹாரில் இருந்து நிதிஷ்குமாரை இந்த விழாவிற்கு வரவழைத்திருப்போமா.

காவிமயமாக்குவதா?
நாட்டை காவிமயமாக்க மத்திய பாஜக அரசு காய்களை நகர்த்தி வருகிறது. மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் திமுக தலையாட்டாது. இந்தி திணிப்போடு இப்போது மாட்டுக்கறி தடையை கையில் எடுத்துள்ளது.

இன்னொரு சுதந்திர போராட்டம்
இந்தியாவில் இன்னொரு சுதந்திர போராட்டத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் சுதந்திர போரட்டத்திற்கு தயாராகி விட்டோம் என காட்டத்தான் இந்த கூட்டம் என ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications