டோர்னியர் விமானிகளின் பேச்சு அடங்கிய கருவி பழுது... விபத்துக்கான காரணம் அறிவதில் சிக்கல்
சென்னை: கடலில் விழுந்து விபத்துக்குள்ளான, டோர்னியர் விமானத்தில் இருந்த விமானிகளின் உரையாடல்கள் பதிவான கருவி பழுதடைந்து விட்டதால், அதில் இருந்த தகவல்களை பெற முடியவில்லை' என, மத்திய அரசு நிறுவனம் கைவிரித்துள்ளது.
சென்னையில் இருந்து, ஜூன், 8ம் தேதி புறப்பட்ட, கடலோர காவல் படையின், 'டார்னியர்' ரக விமானம், பிச்சாவரம் அருகே, கடலில் விழுந்து மூழ்கியது. அதில் பயணம் செய்த, மூன்று விமானிகளும் உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்களை தேடும் போது, விமானத்தின் கருப்பு பெட்டி மற்றும் விமானிகள் அறை பேச்சு கருவியான, 'காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்' ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
இதில், கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கும், 'காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்' கருவி, ஐதராபாத்தில் உள்ள மத்திய மின்னணு நிறுவனத்துக்கும் அனுப்பப்பட்டன. அதன் முடிவுகளுக்காக, கடலோர காவல் படையினர் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, கடலோர காவல் படை (கிழக்கு) கமாண்டன்ட் எஸ்.பி.சர்மா, நேற்று கூறியதாவது...
கருப்பு பெட்டியை, அதை தயாரித்த அமெரிக்க நிறுவனத்திற்கு ஆய்வுக்காக அனுப்பியிருந்தோம். அது, சில தினங்களுக்கு முன் சென்னைக்கு வந்தது. பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில், இரவும், பகலுமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலம், விமானத்தில் என்ன கோளாறு ஏற்பட்டது என்பது விரைவில் வெளிவரும்.
அதே நேரத்தில், 'காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்' கருவியில் பதிவான தகவல்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை தயாரித்த ஐதராபாத்தில் உள்ள மத்திய மின்னணு நிறுவனம், 'கருவியில் இருந்த சர்க்கியூட்கள் பழுதடைந்துவிட்டதாகவும், எனவே, அதிலிருந்த தகவல்களை கண்டுபிடிக்க இயலவில்லை' எனவும், தெரிவித்துவிட்டது.
இதனால், கடைசி நேரத்தில், விமானத்தில், விமானிகள் என்ன பேசினர் என்பதை அறிய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications