ஜெ. மரணத்தில் சந்தேகம் நீடிக்கிறது: பொன். ராதாகிருஷ்ணன் 'பொளேர்'
ஜெயலலிதா மர்ம மரணத்தில் சந்தேகம் நீடிக்கிறது என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் நீடிக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தொடர்ந்து நீடிக்கிறது. சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.
முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருவருமே விசாரணைக் கமிஷன் அமைக்க உத்தரவிடவில்லை. நெடுவாசலில் போராட்ட குழுவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications