சபாநாயகருடன் வாக்குவாதம்- சட்டசபையில் இருந்து கிருஷ்ணசாமி குண்டுகட்டாக வெளியேற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குண்டுகட்டாக சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி எழுந்து ஒரு பிரச்சனை பற்றி பேச அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.

Dr Krishnasamy evicted from Tamil Nadu Assembly

இதையடுத்து சபாநாயகர் இருக்கை அருகே வந்த அவர் நேருக்கு நேராக சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சபாநாயகர் பலமுறை எச்சரித்தும் கிருஷ்ணசாமி அவரது இருக்கைக்கு செல்லவில்லை.

இதனால் அவரை சபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். காவலர்கள் உள்ளே வந்ததும் கிருஷ்ணசாமி தரையில் அமர்ந்து கொண்டார்.

உடனே அவரை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி கூறியதாவது:

தமிழ்நாட்டில் சாதி கலவரங்கள் இல்லை. எந்த பிரச்சனையும் இல்லை என்று சபையில் கூறப்பட்டது.

அதற்கு மாறாக தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. நேற்று ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். 2 தினங்களுக்கு முன்பு வள்ளியூரில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடக்கும் தாக்குதலை மறைத்து தவறான தகவல்களை வெளியிட்டதற்கு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்த பிரச்சனை பற்றி பேச நான் தொடர்ந்து அனுமதி கேட்டு வருகிறேன். ஆனால் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இன்றும் அதே கருத்தை வற்புறுத்திய போது சபையில் இருந்து என்னை சபாநாயகர் வெளியேற்றி உள்ளார். ஜனநாயக முறைப்படி சபை நடக்கவில்லை.

இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+