ஜெயிலுக்குப் போய் குருவைச் சந்தித்த ராமதாஸ்!

மாமல்லபுரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க சித்திரை விழா மாநாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பாமக எம்.எல்.ஏ. காடு வெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து பலமுறை இந்த சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறையிலேயே இருக்கிறார்.
இந்த நிலையில், இன்று காலை அவரை டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் புழல் சிறைக்குப் போய் சந்தித்தனர்.
பின்னர் வெளியே வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறையில் குரு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக, மதிமுக உடன் கூட்டணி ஏற்படுமா என கேட்கிறீர்கள். அந்த மாதிரி எந்த பேச்சு வார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை.
தேர்தலில் யாருடனும், கூட்டணி கிடையாது. பாமக தனித்து போட்டியிடும். வருகிற திங்கட்கிழமை வேட்பாளர் பட்டியல் வெளியிடுகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications