காமராஜர் பெயரை வைத்துக் கொண்டு.. அமைச்சருக்கு "கொட்டு" வைத்த ராமதாஸ்!
சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் பெயரை வைத்துக் கொண்டு அமைச்சர் காமராஜ் செய்து வருவது உலக மகா மோசடி என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.
டாக்டர் ராமாஸும் டிவிட்டரில் ஆக்டிவாக இருந்து வரும் அரசியல் தலைவர் ஆவார். தினசரி டிவிட்டரில் பல அரசியல் சமூக நிகழ்வுகள் குறித்த தனது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்.
அவர் போட்டுள்ள சில டிவிட்டுகளில் கருத்தைக் கவர்ந்த சில...
"அமைச்சர் காமராஜின் மோசடி பற்றி விசாரிக்க உயர்நீதிமன்றம் ஆணை: உன்னதமான தலைவரின் பெயரை வைத்துக் கொண்டு செய்வதெல்லாம் உலக மகா மோசடி"
அமைச்சர் காமராஜின் மோசடி பற்றி விசாரிக்க உயர்நீதிமன்றம் ஆணை: உன்னதமான தலைவரின் பெயரை வைத்துக் கொண்டு செய்வதெல்லாம் உலக மகா மோசடி.
— Dr S RAMADOSS (@drramadoss) April 28, 2015
"கர்நாடக சட்டப்பேரவையில் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் பேச்சு: இனவெறி பிடித்தவர்களிடம் இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்"
மக்களவையில் மூத்த உறுப்பினரை அவமதித்தார் ஸ்மிரிதி இராணி: தகுதியில்லாதவர்களுக்கு பதவி கொடுத்தால் இப்படித் தான் நடக்கும்.
— Dr S RAMADOSS (@drramadoss) April 28, 2015
கர்நாடக சட்டப்பேரவையில் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் பேச்சு: இனவெறி பிடித்தவர்களிடம் இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
— Dr S RAMADOSS (@drramadoss) April 28, 2015
"மக்களவையில் மூத்த உறுப்பினரை அவமதித்தார் ஸ்மிரிதி இராணி: தகுதியில்லாதவர்களுக்கு பதவி கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்"