பெண்களின் திருமண வயதும் காதல் திருமணங்களும்
நீதிமன்றத் தீர்ப்பிலும், தந்தை பெரியாரின் கருத்திலும் உள்ள நியாயத்தையும், அக்கறையையும் பெண்கள் நலனை பாதுகாப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். எனவே.....
1. பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். (அல்லது)
2. 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் போது, அந்தத் திருமணத்துக்கு அவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையைச் சேர்க்கவேண்டும் - இல்லாவிட்டால், அத்தகைய திருமணங்கள் செல்லாதவை அல்லது ரத்துசெய்யத் தகுந்தவை என அறிவிக்கவேண்டும் என்ற கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை சட்டமாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. பெண்கள் பள்ளி & கல்லூரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் பாதுகாப்பாக சென்று வருவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்காக, முக்கிய இடங்களில் பாதுகாப்புக்கு காவலர்களை நிறுத்துவதுடன், சென்னையில் இயக்கப்படுவது போன்று அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் மட்டும் பேருந்துகளை இயக்க வேண்டும்.
4. பெண்களின் பாதுகாப்புக்காக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 01.01.2013 அன்று அறிவித்த 13 அம்சத் திட்டம் முறைப்படி செயல்படுத்தப்பட வேண்டும். இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும்.
5. பெண்களை பின்தொடர்ந்து சென்று தொல்லை தருபவர்களை, முதற்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில், பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் கைது செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதற்காக மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி உங்கள் கட்சியின் செயற்குழு/ பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
குறிப்பு: பெண்களின் பாதுகாப்புக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகள் குறித்த உங்களின் பதிலை பா.ம.க. தலைமையகத்திற்கு தெரிவிக்கும்படி வேண்டுகிறோம்.
இவ்வாறு ராமதாஸ் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications