ஆளுக்கு 2000, 3000 தர பிளான் பண்றாங்க.. சொல்கிறார் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ. 2000,3000 என்று தர திட்டமிட்டுள்ளன திராவிடக் கட்சிகள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடந்த பாமக இளைஞர் அணி மாநாட்டில் பேசுகையில் இந்தக் குற்றச்சாட்டை அவர் வைத்தார்.

ராமதாஸ் பேசுகையில்,

வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் திராவிட கட்சிகள் ஒரு ஓட்டுக்கு ரூ.2,000, ரூ.3,000 என விலை நிர்ணயம் செய்துள்ளனர். ஓட்டை யாருக்கும் விற்பதில்லை என்று ஒவ்வொரு இளைஞரும் தினமும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்க வருபவர்களை விரட்டி அடிக்க வேண்டும்.

Dravidian parties plan to distribute cash to voters, says Dr Ramadoss

தமிழ்நாட்டில் 134 வன்னியர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேறு எங்கும் இது போன்று ஒரே சமுதாயத்தினர் மீது நடவடிக்கை எடுத்ததாக வரலாறு இல்லை.

பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வருவோம். அதுதான் முதல் ஆணையாக இருக்கும். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் ஒரு சொட்டு சாராயம் கூட இருக்காது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமகவைச் சேர்ந்த 15 பேரை எம்.பி.யாக தேர்வு செய்து அனுப்ப வேண்டும். இதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+