நீங்க மதுக்கடையை மூட சொன்னா திறக்க சொல்லி நாங்க போராடுவோம்... கோதாவில் குதிக்கும் குடிகாரர்கள்
அரசு மதுக்கடைகளை மூடினால் திறக்கச்சொல்லி போராட்டத்தில் ஈடுபடுவோம் என குடிகார்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
திண்டுக்கல்: மூடப்பட்ட மதுக்கடைகளை உடனடியாக திறக்க வேண்டும் என குடிகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மதுக்கடைகளை மூடினால் திறக்கச்சொல்லி போராட்டத்தில் ஈடுபடுவோம் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை கடந்த 31ஆம் தேதியுடன் மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன.
இதனால் திறந்திருக்கம் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்று குடிமகன்கள் சரக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக் திறக்க வேண்டும்
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் உள்ள குடிகாரர்கள் சங்கத் தலைவர் முத்துச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குடிகாரர்கள் சிரமப்படாத வகையில் வழக்கம் போல் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

அதிக விலைக்கு விற்பனை
அவர் மேலும் பேசியதாவது, 'கடைகள் குறைவாக இருப்பதால் அந்த கடைகளில் குடிமகன்கள் அதிகமாக போய் சரக்கு வாங்கி வருவதை கண்டு ஒரு குவாட்டருக்கு பத்து ரூபாய் முதல் பதினைந்து ரூபாய் வரை கூடுதலாக வாங்குகிறார்கள். அதுபோல் ஊர் ஊருக்கு இருந்த டாஸ்மாக் கடைகளில் இருந்த பார்களிலேயே சில்லிங் போட்டுக் கொண்டு ஒரு குவாட்டருக்கு 40ரூபாய் முதல் 50ரூபாய் வரை கூடுதலாக எங்கள் குடிமக்களிடம் பகல் கொள்ளை அடித்து வருகிறார்கள்.

திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதை முதலில் அதிகாரிகள் தடுத்து வழக்கம்போல் குவாட்டருக்கு உண்டான பணத்தை டாஸ்மாக் கடைகளில் வாங்க சொல்ல வேண்டும். அதுபோல் சில்லிங் போட்டு கொண்டு குடிமக்களிடம் பகல் பகல் கொள்ளை அடித்து வருபவர்கள் மீது அதிகாரிகளும், போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எப்போதும் போல் குடித்துக்கொள்கிறோம்
இல்லையென்றால் வழக்கம்போல் கடைகளை திறந்துவிடுங்க. அந்தந்த பகுதிகளில் எப்பொழுதும் போல் எங்கள் குடிமகன்கள் குடித்து கொள்வார்கள். இதில் ஏதாவது அரசும், அதிகாரிகளும் மெத்தன போக்கை கடைபிடித்து வந்தால் கூடிய விரைவில் குடிமகன்கள் சங்கமும் போராட்டத்தில் குதிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

போராட்டத்தில் குதிப்போம்
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குடிமக்களை ஒன்று திரட்டி டாஸ்மாக் கடைகளை பொதுமக்கள் மூடச்சொல்லி எப்படி போராட்டத்தில் குதித்து வருகிறார்களோ அதுபோல் நாங்களும், டாஸ்மாக் கடைகளை திறக்க சொல்லி போராட்டத்தில் குதிப்போம் என்று கூறினார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications